கோவை, மே 3: கோவையில் நடை பெற்ற மே தின விழாவில் மறைந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தொழிற்சங்கத்தின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் 27 தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். கோவை மாவட்ட டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் சுமக்கும் பொது தொழிலாளர் சங்கம் கோவையில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மாவட்டம் முழுவதும். 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த சங்கத்தின் சார்பில் பொன்னையராஜபுரத்தில் மே தின விழா கொண்டாடப் பட்டது. இந்த விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.