ராமநாதபுரம், ஏப் 3: மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வு மே 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வர்களுக்கான தேர்வு மையம் மற்றும் பள்ளி விபரங்கள் தவறுதலாக அச்சிப்பட்டிருந்தால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தவறுதலாக உள்ள ஹால்டிக்கெட்டுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கொடுத்து பிழைகளை திருத்தம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அறிவித்தது.