கமுதி, மே 1: கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட டி.வல்லக்குளம் மாயாண்டி மகள் ராதிகா(20). இவருக்கும், பார்த்திபனூர் அருகே பிச்சாத்தனூரைச் சேர்ந்த அருண்குமார்(23) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் ராதிகா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த ஒரு ஆண்டாக பெற்றோரிடம் தான் இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராதிகா வீடு திரும்பவில்லை.