செங்கல்பட்டு, ஏப்.30: செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது வழக்கம். அதேபோன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை, மேல் சிகிச்சைக்காக சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் 108 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 12 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஒரு ஆம்புலன்சில் ஒரு மருத்துவ உதவியாளர் உள்பட 3 பேர் பணியில் உள்ளனர். இந்நிலையில், நேற்று காைல நோயாளி ஒருவரை 108 ஆம்புலன்சில், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஊழியர்கள் தயார் ஆனார்கள். அப்போது, தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர் பாலு என்பவர், 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியரிடம், ‘நோயாளியை ஏற்றி செல்வதற்காக நான் பேசியுள்ளேன். நீங்கள் எப்படி ஏற்றி செல்லலாம்’ என கேட்டுள்ளார்.