பொன்னமராவதி அருகே முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி, ஏப்.30: பொன்னமராவதி அருகே உள்ள வேங்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நடந்தது. பொன்னமராவதி அருகேயுள்ள வேங்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டும் திருவிழாவை முன்னிட்டு பூச்சோரிதல் நடைபெற்றது. இதற்கு வேங்கம்பட்டி, ஒலியமங்கலம், காயாம்பட்டி, வெட்டுக்காடு, சுந்தம்பட்டி, எழுவன்குறைப்பட்டி, சொரக்காய்பட்டி, படுதினிப்பட்டி, மறவப்பட்டி, மடத்துப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பூத்தட்டுகள், பால்குடம், முளைப்பாரி எடுத்து மேல தாளத்துடன்  பக்கதர்கள் அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். பூச்சொரிதலுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்தனர்.  காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: