அரியலூர், ஏப்.26: அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில் கிராமம் சாளைக்குறிச்சி, தலையாரி குடிக்காடு கடுகூர், பொய்யூர் கிராமங்களில் கோடை உழவு, படைப்புழு கட்டுப்பாட்டு முகாம் நடந்தது. அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூவலிங்கம் கூறுகையில், மானாவாரி நிலங்களில் மண் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணை துகள்காள மாற்றுவதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை விட உயிரியல் மருந்துகளான “பெவோஜீயா பேசியானா” மெட்டாரைசியம், பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் மற்றும் என்.பி.வைரஸ், டிரைகோகிரம்மா ஓட்டுண்ணி, பொறி வண்டுகள் போன்றவை படைப்புழுக்களை திறம்பட கட்டுப்படுத்துகின்றன.மக்காச்சோளம் பயிரிடும் முன்பு கோடை உழவு செய்வதன் மூலம் புழுக்களுக்கும். அந்தப்பூச்சிக்கும் இடைப்பட்ட மூன்றாம்கட்ட படைப்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. புடைப்புழுக்களை பறவைகளும், சிற்றுயிர்களும் இரையாக உண்கின்றது.
கோடை உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் அரிப்பை ஏற்பத்தி வேகமாக நிலத்தில் உருண்டோடி விடுகின்றன.