ஏர்போர்ட், ஏப். 26: திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து தினமும் துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் செல்கின்றன. அதேபோல் பல்வேறு நாடுகளிலிருந்து விமானங்களும் இங்கு வருகின்றன. அதில் வரும் பயணிகளை சோதனை செய்யும்போது சில பயணிகள் தங்கம் கடத்தி வருவதும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வருவதும், அதிகாரிகளிடம் அடிக்கடி சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு நேற்று முன்தினம் இரவு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.