நாகர்கோவில், ஏப். 25: சாத்தன்விளை ஊர் முத்தாரம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (25ம் தேதி) தொடங்குகிறது.விழா நாட்களில் காலை 5 மணிக்கு சுப்ரபாதம், 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.இன்று காலை 8 மணிக்கு விளையாட்டுபோட்டிகள், பகல் 2 மணிக்கு கோலப்போட்டி, 4 மணிக்கு அபிராமி அந்தாதி மூலமும் உரையும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கல், 8.15க்கு இந்துசமயம மாநாடு, 9க்கு பரிசு வழங்கல், இன்னிசை கச்சேரி ஆகியன நடக்கிறது.26ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு விளையாட்டு போட்டிகள், மாலை 5 மணிக்கு பக்திகானம், 6 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கல், 6.30க்கு இந்து சமயமாநாடு, 8க்கு சமயவகுப்பு மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், 27ம் தேதி காலை 9 மணிக்கு பண்பாட்டு போட்டிகள், மாலை 3.30 மணிக்கு விளையாட்டு போட்டிகள், 5 மணிக்கு பக்தி கானம், 6 மணிக்கு தீபாராதன, 7 மணிக்கு கபடி போட்டி ஆகியன நடக்கிறது.