பொள்ளாச்சி, ஏப்.25: பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சி அருகே போடிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டும்ேதாறும் சித்திரை மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டப்படுகிறது. அதுபோல் இந்த ஆண்டில், திருவிழாவுக்காக கடந்த 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் விழா துவங்கியது. பின் 12ம் தேதி முதல், பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சி துவங்கியது. இந்த பூவோடு நிகழ்ச்சி தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. இதையடுத்து 21ம் தேதி மீன்குளத்தி பகவதியம்மன், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன்கோயில், கன்னியாகுமாரி பகவதியம்மன், மலைகோட்டை, அவிநாசி, கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அம்மன் கோயில்களில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்தம் கொண்டு வந்தனர்.