கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு வாலிபரை தாக்கியவர் கைது

கும்பகோணம், ஏப். 25: கும்பகோணம் அருகே கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் கஸ்தூரிபாய் ரோடு நகரை சேர்ந்த பழனிசாமி மகன் எழிலன் (28). மாதுளம்பேட்டை தெரு எம்சிஎஸ்ஆர் தெருவை சேர்ந்த ராஜராஜன் மகன் விக்னேஷ் (25). இருவரும் கடந்த 22ம் தேதி இளங்கோ நகரில் உள்ள குட்செட் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விக்னேஷ், கிரிக்கெட் பேட்டால் எழிலனின் முகத்தில் தாக்கினார்.

இதில் காயமடைந்த எழிலன், கும்பகோணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எழிலன் கொடுத்த புகாரின்பேரில் கிழக்கு போலீசார் விக்னேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: