தஞ்சை தனியார் வங்கியில் ரூ.10 நாணயம் செல்லாது என்றதால் வாலிபர் தர்ணா போராட்டம்

தஞ்சை, ஏப். 25: தஞ்சையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.10 நாணம் செல்லாது என்று கூறியதால் வாலிபர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

தஞ்சை மகர்நோம்பு சாவடி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் பால் வியாபாரி. இவர் தினமும் பால் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வங்கியில் செலுத்துவது வழக்கம். நேற்று தனியார் வங்கியில் ரூ.1 லட்சத்தை செலுத்த சென்றுள்ளார். இதில் 1000 ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்களாக வைத்திருந்தார். இதை வங்கி கணக்கில் செலுத்த வங்கி மேலாளர் வாங்க மறுத்தார். இதுகுறித்து கேட்டபோது 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வங்கி மேலாளர் பதில் அளித்துள்ளார். இதனால் முத்துகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் மற்ற வங்கியில் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி வருகிறார்கள். ரூ.10 நாணயம் செல்லாது என்று அரசும் அறிவிக்கவில்லையே என்று கேட்டார். அதற்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே 10 ரூபாய் நாணயம் வாங்குவோம் என்று வங்கி மேலாளர் கூறினார். இதனால் முத்துகிருஷ்ணன் வங்கிக்கு வெளியே வந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: