பொன்னமராவதி, ஏப். 25: பொன்னமராவதி ஒன்றியத்தில் பொதுமக்கள் பயன்பாடின்றி குப்பை தொட்டிகள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் பெறப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக ஊராட்சிகள் தோறும் மக்கள்தொகை அடிப்படையில் 2 முதல் 10 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டது. இந்த தொட்டிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த முடியால் பல ஊராட்சிகளில் இந்த தொட்டிகளை பயன்படுத்தாமல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்படும் ஒரு சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளில் 4 முதல் 20 தொட்டிகள் வரை தூய்தை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என பெயர் எழுதி கொண்டு வந்து ஊராட்சி மன்ற அலுவலகங்களின் அருகில் இறக்கப்பட்டு கிடக்கிறது.