கடலில் கரை ஒதுங்கிய பிணம்

சாயல்குடி, ஏப். 25: சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடலில் அடையாள தெரியாத ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது. இதுபற்றி மூக்கையூர் பகுதி மீனவர்கள் வாலிநோக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து கடலோர காவல்படையினர் கூறும்போது, இறந்து 3 நாட்களான சுமார் 40 வயது மதிப்புள்ள ஆண் சடலம் மூக்கையூர் கடலில் கரை ஒதுங்கியுள்ளது. இறந்தவரின் உடலில் வெட்டு காயங்கள் போன்றவை இல்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு இறந்த நிலை குறித்து தெரிய வரும். மேலும் வாலிநோக்கம் கடற்கரையில் ஆளில்லாத பைக் ஒன்று நின்றுள்ளது. அந்த பைக் குறித்தும் விசாரனை நடந்து வருகிறது என்றனர்.

Related Stories: