திருப்புவனம் வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் சரண்

மதுரை, ஏப். 25: கொலை வழக்கில் தேடப்பட்டவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் செங்குளத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கடந்த 18ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்புவனம் போலீசார் கொலையாளியை தேடிவந்தனர். இந்நிலையில் ேபாலீசாரால் தேடப்பட்ட மதுரை நெடுங்குளத்தைச் சேர்ந்த விஜி(எ)விஜயகுமார்(28), மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் கவுதமன் உத்தரவிட்டார்.

Related Stories: