திருமயம், ஏப்.24: திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையாணூர் மங்களநாச்சி அம்மன், அடைக்கலங்காத்தார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு துளையாணூர் மங்கள கண்மாய் திடலில் நேற்று காலை 10 மணியளவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருமயம், காரைக்குடி, கீழாசீவல்பட்டி, கோனாபட்டு, பில்லமங்களம், ராங்கியம், விராச்சிலை, பனையப்பட்டி, குழிபிறை, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்நிலையில் மஞ்சுவிரட்டு திடலில் இருந்து குளையாணூர் கிராம கோயில் காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது.