அதிமுகவினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

ஈரோடு, ஏப். 24: ஈரோட்டில் அதிமுகவில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் விலகி திமுகவில் இணைந்தனர். ஈரோடு மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட காரப்பாறை பகுதியில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 31வது வார்டு அதிமுக கிளை செயலாளர் மாறன் மற்றும் வில்லரசம்பட்டி குப்பன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்டனர். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்டவர்களை மாவட்ட செயலாளர் முத்துசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் குமார்முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, திண்டல் குமாரசாமி, வில்லரசம்பட்டி முருகேசன், மணிராசு, ராதாகிருஷ்ணன், திருமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: