ராமநாதபுரம், ஏப்.24: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூலி தொழிலாளர்களாக 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர். மாவட்டத்தில் சாலைப்பணிகள், கட்டிடப் பணிகள், உப்பளம், இறால் பண்ணைகள், ஹோட்டல்கள், லாட்ஜ் போன்ற இடங்களில் கூலி தொழிலாளிகளாக அதிகமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்கின்றனர். சம்பளத்தை வங்கிகளின் மூலமாக குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து தீபாவளி, பொங்கல் என பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று திரும்புவர்கள். இங்கேயே தங்கி பணிகளை செய்வதால் தடையில்லாமல் வேலைகள் நடைபெற்றதாக தெரிவிக்கின்றனர்.