சாயல்குடி, ஏப். 24: முதுகுளத்தூர், சாயல்குடி, வாலிநோக்கம், சிக்கல் மற்றும் கடலாடி பகுதிகளில் முன் அறிவிப்பின்றி தொடரும் மின்வெட்டால் அலுவலக பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் தேவையான உதவிகளை பெறமுடியாமலும், இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். முதுகுளத்தூர் மற்றும் கடலாடியில் தாலுகா, யூனியன், சார்பதிவாளர், கல்லூரிகள், மேல்நிலைப் பள்ளிகள், கருவூலம், வங்கிகள், மருத்துவனைகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை (சான்றுகள்) வழங்க அரசு அனைத்தையும் கணினிமயமாக ஆக்கியுள்ளது.