மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மருத்துவம்  மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல்  செய்த மானியக் கோரிக்கை கொள்கை விளக்க  குறிப்பில் கூறியிருப்பதாவது: மூன்றாவது அலையில் தொற்று ஏற்படும் குழந்தைகளின் சிகிச்சைக்காக ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில கொரோனா கட்டளை மையம், பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள மூன்றாவது அலை தாக்கம் பற்றி விரிவாக ஆராய்ந்து இந்த தொற்று பரவாமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.இதன் அடிப்படையில் ஆக்சிஜன், தீவிர சிகிச்சைப் பிரிவு, வென்டிலேட்டர்கள் மற்றும் சுவாசக் கருவிகள், திரவ மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு மற்றும் சிலிண்டர் நிரப்புவதற்கான ஏற்பாடுகள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், மருந்துகளின் தேவைகள் கணக்கிடப்பட்டு மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராக வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: