ராமேஸ்வரம், ஏப். 24: ஒரு சமுதாய பெண்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து வாட்ஸ்அப்பில் ஆடியோ பரவியது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இச்சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பெண்களை இழிவாகி பேசி ஆடியோ பதிவு செய்தவர்களை கைது செய்யவும், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.