ராமநாதபுரம், ஏப்.24: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளின் வழியாக பெற்றுக்கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 7412 மாணவர்கள், 8262 மாணவிகள் என மொத்தம் 15474 பேர் தேர்வு எழுதினர். இதில் 6467 மாணவர்கள், 7815 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.30% ஆகும். தேர்வு எழுதியவர்கள் அனைவருக்கும் இன்னும் சில வாரங்களில் ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படிப்புக்கு செல்ல வசதியாக அந்தந்த பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுகிறது.