தா.பழூர், ஏப்.24: சுத்தமல்லி புதுத்தெருவில் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி 8 மாதமாக இயங்கவில்லை. இதனால் 8 மாதமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி கிராமம் புதுத்தெருவில் குடிநீர் ெதாட்டி உள்ளது. இந்த தொட்டியில் மோட்டார் பழுதானதால் கடந்த 8 மாதமாக இயங்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள், தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது தெரு குழாய்களில் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. புதுத்தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், குடிநீர் தொட்டியை நம்பியே உள்ளது.