தஞ்சை பெரிய கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தஞ்சை, ஏப். 24: ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 400க்கும் மேற்பட்ேடார் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறன்றனர். இதைதொடர்ந்து இந்திய நாட்டின் கடல் எல்லை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அதேபோல் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்

படுகிறது.மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளித்தனர்.

Related Stories: