கன்னியாகுமரி, ஏப்.24: இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் துணை ஜனாதிபதி சென்னை வருகையையொட்டி கன்னியாகுமரி கடலில் சவ்காஸ் ஆபரேஷன் நடந்தது.பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடற்படையுடன் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபடும் சவ்காஸ் ஆபரேஷன் நடத்தப்படுகிறது.தற்போது துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு சென்னைக்கு வந்துள்ளார். அவர் இன்று (24ம் தேதி) திரும்புகிறார். அதுவரை கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில் சவ்காஸ் ஆபரேஷன் நடத்தப்படுகிறது.