பள்ளிப்பட்டு, ஏப். 24: பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டுர்பேட்டை ஊராட்சி ஒன்றிய முன் மாதிரி துவக்கப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நடந்தது. அதில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.எஸ். இளங்கோவன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் எம். எம். லோகமணி ஆகியோர் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.