சொகுசு பஸ் சாலையில் சிக்கி போக்குவரத்து பாதிப்பு

வாழப்பாடி, ஏப்.23: வாழப்பாடி அருகே தனியார் சொகுசு பஸ், சாலையில் தரை தட்டி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் அருகே தனியார் ஸ்டாண்டில் இருந்து கொகுசு பஸ் நேற்று மாலை வெளியே வந்தது. அப்போது பஸ் பின்பகுதி, தாழ்வான பகுதியில் முட்டியதில், தரை தட்டி நின்றது. இதனால் சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். பின்னர் பொக்லைன் மூலம் பஸ் அப்பகுதியில் இருந்து நகர்த்தப்பட்டது. போக்குவரத்து பாதிப்பினால், வானங்கள் ேவறு வழியில் திருப்பி விடப்பட்டது.

Related Stories: