சத்தியமங்கலம், ஏப். 23: கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிகிழங்கு பாரம் ஏற்றி சென்ற லாரி நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் மரவள்ளி கிழங்கை அறுவடை செய்வதால் வியாபாரிகள் கிழங்கை விலைக்கு வாங்கி லாரிகள் மூலம் சேலம், தருமபுரி பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு ஆகிய இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளிகிழங்கு பாரம் ஏற்றிய லாரி நேற்று காலை கடம்பூர் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.