கும்பகோணம், ஏப். 23: தற்கொலை செய்து கொண்ட கணவரின் வீட்டை எழுதி கேட்டு அவரது இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி மனைவி, அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.கும்பகோணம் மவுனசாமி மடத்துத்தெருவை சேர்ந்தவர் மணிராவ் மகன் ஜெயசங்கர் (40). சமையலரான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயசங்கர், கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து ஜெயசங்கரின் உடலை பார்க்கக்கூடாது என்றும், வீட்டுக்கு வரக்கூடாது என ஜெயசங்கரின் தந்தை மணிராவ் மற்றும் தங்கை தனலட்சுமி ஆகியோர் முத்துலட்சுமி, அவரது பெண் குழந்தைகளை அடித்து விரட்டினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கணவரின் சொந்த வீட்டை எனக்கு எழுதி வைக்க வேண்டுமென அவரது மனைவி கேட்டார்.