செந்துறை, ஏப்.23: செந்துறையில் கோடை வெப்பம் வாட்டிவதைத்த நிலையில் நேற்று சிறிது நேரம் கோடை மழை பெய்ததால் வெப்பம் தனிந்தது.இதனால் பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர்.அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழையின்றி வெயில் மக்களை வாட்டி வதைத்தது, மேலும் தற்போது சித்திரை மாத கத்திரி வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளதால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். வெப்பத்தை தனிக்க இளநீர், தர்பூசணி, நொங்கு, குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவற்றை பருகி உடல் வெப்பத்தை தனித்து வந்தனர்.