பள்ளபாளையத்தில் அனுமதியின்றி மதுவிற்ற இருவர் கைது

க.பரமத்தி, ஏப்.23: பள்ளபாளையத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்ற இருவர் கைதுசின்னதாராபுரம் அருகே ஒரே ஊரில் வெவ்வேறு இடங்களில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.சின்னதாராபுரம் சுற்று பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்கப் படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் நெருதாஸ் மனைவி கற்பகமணி(40), இவரது வீடு அருகே 5மது பாட்டில்கள், இதே போல வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாரிமுத்து(49), வீடு பின்புறம் 6மது பாட்டில்கள் அரசின் அனுமதியின்றி மதுபானம் விற்க முயன்றது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த சின்னதாராபுரம் போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: