தாத்தாவை வெட்டிய பேரனுக்கு வலை

சேலம், ஏப்.22:சேலத்தை அடுத்துள்ள  அய்யம்பெருமாம்பட்டி பழையூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி(70). இவருக்கு, தனது மூத்த மகன் மனோகரனுடன் கடந்த 2 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு கொய்யா மரத்தை மனோகரனின் மகன் அருண்குமார் வெட்டியுள்ளார். இதனை தட்டிகேட்டதால் கந்தசாமியின் தலை, முதுகு பகுதியில் அருண்குமார் வெட்டினார். இதுபற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தாத்தாவை அரிவாளால் வெட்டிய அருண்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: