டாஸ்மாக்கில் தகராறு வாலிபரை தாக்கியவர் கைது

திருச்சி, ஏப்.22:   புதுக்கோட் டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்தவர் அழகு (42). திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். கே.கே.நகர் அருகே கே.சாத்தனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர்கள் கே.சாத்தனூரில் உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் இரவு மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன் வைத்திருந்த மதுவை எடுத்து அழகு குடித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அழகை தாக்கினார். இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் அழகுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: