கும்பகோணம், ஏப். 22: கும்பகோணம் அடுத்த அண்ணலக்கரஹாரத்தை சேர்ந்த குருநாதன் மகன் மணிகண்டன் (39). வலையப்பேட்டை சேர்ந்த லாடராஜா மகன் விக்கி (22). இவர்கள் இருவரும் மாட்டு வண்டி ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாட்டு வண்டியில் பூட்டியிருந்த மாடு, வளையப்பட்டை சாலையில் படுத்து கொண்டது. அப்போது விக்கி, மாட்டை அடித்து துன்புறுத்தினார். இதை மணிகண்டன் குடும்பத்தினர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விக்கி, அவரது தந்தை லாடராஜா, பத்மா, செல்வம் ஆகியோர் சேர்ந்து மணிகண்டன், இவரது தாயார் ராஜேஸ்வரி, இவரது தம்பி குருமூர்த்தி உள்ளிட்ட 3 பேரையும் கட்டையால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் விக்கி உள்ளிட்ட 4 பேர் மீது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விக்கி, அவரது தந்தை லாடராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.