கோடங்கிபட்டி சாலையில் குப்பைகள் எரிப்பதால் வாகனஓட்டிகள் தடுமாற்றம்

கரூர், ஏப்.22: கோடங்கிபட்டி சாலையில் குப்பைகள்  எரிப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். கரூர் ராயனூரில் இருந்து கோடங்கிபட்டி செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகளை உடனுக்குடன்  அகற்றுவதில்லை. பிளாஸ்டிக் கழிவுகள்அதிகமாக உள்ளது. மேலும் காலியிடங்களில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். அகற்றப்படாத குப்பைகளுக்கு தீவைத்து எரிக்கப்படுகிறது. நேற்று கோடங்கிபட்டி செலலும் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் தீவைத்து எரிக்கப்பட்டது.  இதனால் வாகன ஓட்டிகள் கடும்அவதிப்பட்டனர்.இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் தடுமாற்றம் அடைந்தனர். குப்பைஎரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவக்கை எடுக்க வேண்டும்என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: