சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி சாவு

செம்பட்டி, ஏப்.22: செம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி உயிரிழந்தார். செம்பட்டி அருகே திண்டுக்கல்-குமுளி ரோட்டில், நேற்று முன்தினம் மாலை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, வீரக்கல் பிரிவு அருகே 60 வயதுள்ள அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர், ரோட்டை கடந்து செல்ல முயற்சி செய்தார். அந்த நேரத்தில், திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கிச் சென்ற லாரி அந்த பெண் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: