சித்திரை பவுர்ணமி விழா சிறப்பு பூஜை

நத்தம், ஏப்.22:  நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா நடந்தது. இதையொட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், புஷ்பம், தேன் உள்ளிட்ட பதினாறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன.  சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதைபோலவே நத்தம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. மேலும் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: