கறம்பக்குடி, ஏப்.21: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் முள்ளங்குருச்சி ஊராட்சி சூரக்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.கடந்த சில நாட்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலமாக குடிநீர் வழங்காததால் அப்பகுதி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் இதன் காரணமாக பெண்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்லும் நிலை ஏற்பட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரி அப்பகுதி பொது மக்கள் பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.