கும்மிடிப்பூண்டி, ஏப். 18: கும்மிடிப்பூண்டி அருகே நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆயிரத்து, 400 மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக ஆந்திர எல்லையான கண்ணம்பாக்கம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு மதுபாட்டில் சப்ளை செய்யவதற்காக, கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில், மதுவிலக்கு போலீசார் விரைந்து வந்து சத்தியவேடு-கவரப்பேட்டை, மற்றும் நாயுடு குப்பத்திலிருந்து பல்லவாடா செல்லும் சாலைகளில் வரும் வாகனங்களை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர்.