கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து

கோவை, ஏப்.16: கோவையில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

 கோவை,  சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம், என்ஜிஆர் காலனியை சேர்ந்தவர் சின்னசாமி.  இவரது மகன் சுரேந்திரன்(18). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில்  பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பீடம்பள்ளி  தினேஷ்(19), பீளமேடு கார்த்திக்(19) ஆகியோர் பி.காம் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்றுமுன் தினம் கல்லூரி டூ வீலர் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த  சுரேந்திரனை, முன்விரோதம் காரணமாக தினேஷ், கார்த்திக் ஆகியோர் கத்தியால்  குத்தினர். படுகாயமடைந்த சுரேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பீளமேட்டில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுரேந்திரன் கொடுத்த  புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குபதிந்து சக கல்லூரி மாணவர்கள் இருவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: