ராமநாதபுரம், ஏப். 16: காரியாபட்டி பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்தார். காரியாபட்டி ஒன்றிய பகுதிகளில் இராமநாதபுரம் பாரளுமன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். காரியாபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் ராமநாதபுரம் பாராளுமன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ்கனி பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியதாவது, நிலையூர் கம்பிக்குடி கால்வாய்திட்டம் நிறைவேற்றப்படும். மக்களின் தேவை அறிந்து திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் ராகுல் பிரதமராகவும், தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராகவும் வருவது உறுதி என்றார்.