நத்தம், ஏப். 12: நத்தம் அருகே சமுத்திராபட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. முதல் நாள் ஊரணியில் அம்மன் கரகத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அம்மன் மின் ரதத்தில் எழுந்தருளி அதிர்வேட்டுகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊரணியில் புறப்பட்ட ஊர்வலம் கோயிலை சென்றடைந்தது.