துறையூர், ஏப்.11: துறையூரில் முதல்வர் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அனாதையாக கிடந்த ரூ.9,600ஐ தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றினர். இந்த பணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை தாசில்தார் ஞானவேல் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் துறையூர் குட்டக்கரை என்ற இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கிருந்து சந்தேகப் படும்படியாக சிலர் ஓடினார்கள்.