கோவை, ஏப்.11: கோவை மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. முதல் நாளில் 170 விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது. கோவை அடுத்த காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மேட்டுப்பாளையம் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம்., பி.காம் (சி.ஏ)., பி.ஏ. பொருளாதாரம், பி.ஏ ஆங்கில இலக்கியம், பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பி.ஏ சுற்றுலா மற்றும் டிராவல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட 7 பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் மொத்தம் 420 இடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.