கன்னியாகுமரியில் இயேசுவின் சிலுவைபாடு நிகழ்ச்சி

கன்னியாகுமரி, ஏப். 11:  இயேசுவின் சிலுவை பாடு குறித்த நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நாளை நடக்கிறது. கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இயேசுவின் சிலுவைப்பாடு குறித்த நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் பங்கேற்கின்றனர். 4 பிரமாண்ட அரங்கில் இது நடக்கிறது.   யூத வாழ்வியலில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக விளக்கும் ‘அவர் உயிரோடு இருக்கிறார்’ என்ற இந்த நிகழ்ச்சி 2 மணிநேரம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை திருத்தல அதிபர் ஜோசப் ரொமால்ட் தலைமை வகிக்கிறார். ஏற்பாடுகளை பங்கு பேரவை துணை தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், பொருளாளர் பெனி, உப தலைவர் தினகரன், கன்னியாகுமரி ஒய்எம்சிஏ செயலாளர் ஸ்டாலின், நாடககுழு தலைவர் வினித் ஆகியோர் செய்துள்ளனர்.

Related Stories: