சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயவர்தனைஆதரித்து ஆலந்தூரில் நடந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஒரு நல்ல இளைஞர். நல்ல வேட்பாளரை கொடுத்திருக்கின்றனர். 2வது முறையாக போட்டியிடுகிறார். என்னை போல் டாக்டருக்கு படித்தவர். மக்களுக்கு என்ன தேவையோ, அவற்றை தீர்ப்பதற்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் சேவை செய்தார். மீண்டும் சேவை செய்ய அவரது வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். மத்திய சென்னை வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் கடுமையாக உழைப்பது போன்று, தென்சென்னை வேட்பாளர் வெற்றி பெற பாமகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். பாமகவினர் கடுமையாக உழைக்கிறார்கள் என்று என்னிடம் ஜெயவர்தன் சொல்ல வேண்டும். கடுமையாக உழைக்கிறீர்கள். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.