மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

திருப்புத்தூர், ஏப். 9: திருப்புத்தூர் அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா கண்ணமங்கலப்பட்டியை சேர்ந்தவர் பிரதீப்(22). இவர் வண்டியில் குடிதண்ணீர் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தண்ணீர் விற்க சென்ற இடத்தில் இவருக்கும், சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தைச் சேர்ந்த 17 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த அந்த பெண்னை நான்கு தினங்களுக்கு முன் காணவில்லையாம். பிரதீப் அந்த மைனர் பெண்ணை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று இருக்கலாம் என பெண்ணின் தந்தை எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பின்னர் போலீசார் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில் கோவையில் இருந்த இருவரையும் எஸ்.வி.மங்கலம் போலீசார் அழைத்து வந்து திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக கூறி பிரதீப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: