கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

பெரம்பலூர்,ஏப். 9: பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன்  மீட்கப்பட்டது. பெரம்பலூர் -  வடக்குமாதவி சாலையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான கிணற்றில், 1 வயது பெண் புள்ளிமான் தவறி விழுந்தது. இதையறிந்த, அவ்வழியே சென்ற பொதுமக்கள் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புபடை வீரர்களுகக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் கிணற்றிலிருந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட புள்ளிமானை வன அலுவலர் பாண்டியனிடம் தீயணைப்புப் படையினர் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சித்தளி வனகாப்பு மையத்தில் புள்ளிமானை விட்டனர்.

Related Stories: