கொடைக்கானல், ஏப்.8: கொடைக்கானலில் சீல் வைக்கப்பட்ட ஓட்டல்களில் பணியாற்றிய 15 ஆயிரம் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என, ஐபி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். திண்டுக்கல் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து ஐ.பி.செந்தில் குமார் எம்எல்ஏ நேற்று கொடைக்கானலில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், ‘‘எட்டு ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்து வருகின்றனர். மக்களுக்கு நன்மை செய்யாத ஆட்சியாக உள்ளது. 5 வருடம் மதவாத பாஜ ஆட்சி இந்தியாவை ஆண்டது. பிரிவினைவாதத்தை தூண்டி மதவாதத்தை தூண்டி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆட்சிகள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை இதற்காக திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.