வால்பாறை, ஏப்.7: மக்களவை தேர்தலை முன்னிட்டு வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்பாறை மற்றும் ஆனைமலை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். இந்த வாகன சோதனையில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் உரிய ஆவணமின்றி ரூ.30.5 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் சிறப்பு அதிகாரியிடம் உரிய ஆவணங்களை ஒப்படைத்தாக இதுவரை ரூ.11.5 லட்சம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது என உதவி தேர்தல் அலுவலர் துரைசாமி தெரிவித்துள்ளார்.