தந்தைக்கு அரிவாள் ெவட்டு மகன்கள் மீது வழக்கு

பாபநாசம், ஏப். 5: பாபநாசம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உள்ள இளங்கார்குடியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (56). இவரது மனைவி லலிதா. மகன்கள் ராஜ்குமார் (27), தினேஷ்குமார் (23). இதில் ராஜ்குமாருக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனைவி லலிதாவிடம் கோவிந்தராஜ் தகராறு செய்தார். இதுகுறித்து தந்தையிடம் மகன் ராஜ்குமார் கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமாரை கோவிந்தராஜ் அரிவாளால் வெட்டினார். பின்னர் தன்னை வெட்ட பயன்படுத்திய அரிவாளை பிடுங்கி கோவிந்தராஜை ராஜ்குமார் வெட்டினார். மேலும் இரும்பு கம்பியால் கோவிந்தராஜை தினேஷ்குமார் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் நேற்று காலை இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: